Pages

Sunday 15 January 2012

பொங்கல் - நாம் கொண்டாடலாமா?

பொங்கல் - நாம் கொண்டாடலாமா என்கிற கேள்வியை நான் எழுப்புவது நியாயமில்லைதான். ஏனெனில் பல  இன்னும் சொல்லப் போனால் எல்லா க. கிறித்தவர்களும் பொங்கல் வைப்பதை ஒரு நிகழ்வாகவே கொண்டாடி வருகிறார்கள். ஆனால் அது மிகச் சரியான முடிவுதான்.
ஆனால் நமது விழா சூரியனை எடுத்துவிட்டு அந்தோனியாரை முன்னிறுத்தி விட்டோம்.பொங்கல் விழாவுக்கு மிக அருகாமையில் வரக்கூடிய ஒரு புனிதர் என்பதனாலும், அவர் மிகவும் பேமஸ் என்பதனாலும் இது இன்னும் நமது மத்தியில் மிகச் சிறப்பாகவே வந்து விட்டது.
ஆனால் விசுவாசச் சிக்கல்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதைக் கிறித்தவ மதத்திற்கூடாகப் பார்ப்பதிலும் தவறில்லை. ஆனால் அதே சமயம் இதைத் தமிழருக்குண்டான விழாவாகப் பார்ப்பதிலும் தவறில்லை என்பதை எல்லாரும் நினைவில் வைப்பது நல்லது.