Pages

Saturday 1 January 2011

புத்தாண்டு

புத்தாண்டு புதிய நம்பிக்கையை விதைக்கின்ற நாளாக இருக்கட்டும். வரலாற்றின் கடந்த பக்கங்கள் படிப்பினையச் சொல்லித் தரும் பாடங்கள். படிக்கிறவன் கற்றுக் கொள்கிறான். இல்லாதவன் பழைய தவறுகளையே மீண்டும் செய்கிறான்.
புதியது என்பது பழையதிலிருந்து ஊற்றெடுக்கும். அதைப் புரிந்தால் பழைய நல்லவைகள் தொடரும். பழைய குற்றங்கள் மறையும்.
நம்பிக்கையின்மை மறையவும், வெறுப்பு குறையவும், வாழ்வின் சரியான புரிதல் இன்னும் சற்று அதிகமாக எல்லா மதத்திலும், எல்லார் மத்தியிலும் இருக்கவும் விழைகிறோம்.
நீதிக்கான தாகமும், நேர்மைக்கான வேட்கையும்,  அடிமைப்படுத்தும் எண்ணம் தவிர்க்கவும், அன்பின் கண்கொண்டு பார்க்கவும் இந்த ஆண்டு உதவி செய்யும் என்கிற நம்பிக்கையும் நம்மிடம் இருக்க விழைகிறேன்.

வெளிக்கொண்டாட்டங்கள் உள்மன புரிதல்களின், வெளிப்பாடுதானே தவிர,  வெறும் வெளிக் கொண்டாட்டம் மட்டுமே அல்ல.
வெறும் காலண்டர் கொண்டாட்டமாக இல்லாமால் - உள்ளிருந்து வரும் உண்மைக் கொண்டாட்டமாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment